என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புஷ்ப யாகம்"
- மலர்கள் நிரப்பப்பட்ட கூடைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன.
- ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கு புஷ்பார்ச்சனை.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் இரவு புஷ்ப யாகத்துக்கான அங்குரார்ப்பணம் நடந்தது. அதன் ஒரு பகுதியாக வசந்த மண்டபத்தில் சேனாதிபதி உற்சவம், மிருதங்கரஹணம், ஆஸ்தானம் மற்றும் யாக சாலையில் அங்குரார்ப்பண நிகழ்ச்சி நடந்தது.
இந்தநிலையில் நேற்று மதியம் பூந்தோட்ட அலுவலகத்தில் பல்வேறு வகையான மலர்களை தனித்தனியாக சேகரித்து, கூடைகளில் நிரப்பப்பட்டன. அந்த மலர்களுக்கு தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி சிறப்புப்பூஜைகள் செய்தார். பூஜைகள் முடிந்துதும் பூந்தோட்ட அலுவலகத்தில் இருந்து ஏழுமலையான் கோவிலுக்கு மலர்கள் நிரப்பப்பட்ட கூடைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன.
அப்போது தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி பேசுகையில், மொத்தம் 8 டன் எடையிலான 17 வகையான மலர்கள் மற்றும் இலைகளால் மதியம் 1 மணியில் இருந்து மாலை 5 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கு புஷ்பார்ச்சனை எனப்படும் புஷ்ப யாகம் நடத்தப்பட்டது.
அதில் 4 டன் மலர்கள் தமிழகத்தில் இருந்தும், தலா 2 டன் மலர்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இருந்தும் வந்தன. முன்னதாக காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கு ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது, என்றார்.
புஷ்ப யாகத்தில் கோவில் துணை அதிகாரி லோகநாதம், தோட்டக்கலைத்துறை இயக்குனர் சீனிவாசலு, பறக்கும் படை அதிகாரி நந்தகிஷோர், பேஷ்கார் ஸ்ரீஹரி, பார்பதீடர் உமா மகேஸ்வரரெட்டி மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருச்சானூர்
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 10-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி வரை வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்தது. அதையொட்டி நடந்த நித்ய கைங்கர்யங்களில் அர்ச்சகர்கள், அதிகாரிகள் அல்லாதவர்கள் மற்றும் பக்தர்கள் செய்த தவறுகளால் ஏற்படுகின்ற தோஷ நிவர்த்திக்காக புஷ்ப யாகம் செய்வது வழக்கம்.
இந்தநிலையில் நேற்று காலை அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், நெய், தேன், இளநீர் போன்ற சுகந்த திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. மதியம் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து கோவிலுக்கு பல்வேறு மலர்கள் நிரப்பப்பட்ட கூடைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.
கோவில் அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் மாலை 5 மணியில் இருந்து இரவு 8 மணி வரை 3 டன் எடையிலான பல்வேறு அலங்கார, பாரம்பரிய மலர்களால் புஷ்ப யாக மகோற்சவம் நடத்தப்பட்டது. அதில் அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்றனர்.
- உற்சவ மூர்த்திகள் வீதி உலா வந்தனர்.
- 14 வகையான பூக்கள் மற்றும் இலைகள் பயன்படுத்தப்பட்டன.
திருப்பதி மாவட்டம் அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த மே மாதம் 31-ந்தேதியில் இருந்து ஜூன் மாதம் 8-ந்தேதி வரை நடந்தது. கோவிலில் நடந்த நித்ய கைங்கர்யங்கள், பிரம்மோற்சவ விழாவில் அர்ச்சகர்கள், அதிகாரிகள், பக்தர்கள் தெரிந்தும், தெரியாமலும் செய்த தவறுகளால் ஏற்பட்ட தோஷ நிவர்த்திக்காக நேற்று கோவிலில் புஷ்ப யாகம் நடத்தப்பட்டது.
உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, பிரசன்ன வெங்கடேஸ்வரருக்கு பால், தயிர், தேன், சந்தனம், இளநீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. புஷ்ப யாகத்துக்கு பயன்படுத்தப்பட்ட மலர்கள் கோவிலில் உள்ள மூலமூர்த்தியிடம் வைத்து சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது.
அதன் பிறகு மலர் கூடைகளை கோவிலின் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக பிரத்யேக மேடைக்கு எடுத்து வந்தனர். உற்சவ மூர்த்திகளும் வீதி உலா வந்தனர். மதியம் அர்ச்சகர்கள் வேத மந்திரங்களை ஓத மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க புஷ்ப யாகம் நடந்தது.
அதில் துளசி, சாமந்தி, கன்னேறு, மொகலி, சம்பங்கி, ரோஜா என 14 வகையான பூக்கள் மற்றும் இலைகள் பயன்படுத்தப்பட்டன. அதன்பிறகு கோவிலின் நான்கு மாட வீதிகளில் பெரிய சேஷ வாகனத்தில் உற்சவர்கள் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
- இன்று இரவு அங்குரார்பணம் நடக்கிறது.
- நாளை திருவீதி உற்சவம் நடைபெறும்.
பிரசன்ன வெங்கடேஸ்வர சாமி கோவிலில் நாளை (வியாழக்கிழமை) புஷ்பயாகம் நடைபெறுகிறது. இதற்காக இன்று (புதன்கிழமை) இரவு அங்குரார்பணம் நடக்கிறது.
இந்த கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் மே மாதம் 31-ந் தேதி முதல் ஜூன் மாதம் 8-ந் தேதி வரை நடைபெற்றது. இந்த உற்சவத்தின்போது ஏற்படும் தவறுகளுக்கு பரிகாரமாக புஷ்பயாகம் நடத்தப்படுகிறது.
வியாழக்கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணி வரை ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடேஸ்வரருக்கு திருமஞ்சனம் நடைபெறும். பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள் மற்றும் பிற வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. மதியம் 2.40 மணி முதல் 5 மணி வரை புஷ்பயாகம் நடத்தப்படுகிறது.
இதில் பல்வேறு வகையான மலர்களால் இறைவனுக்கு அபிஷேகம் செய்கின்றனர். அதன்பின் திருவீதி உற்சவம் நடைபெறும்.
- தோஷ நிவர்த்திக்காக புஷ்ப யாகம் நடத்துவது வழக்கம்.
- உற்சவர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த மே மாதம் 26-ந்தேதியில் இருந்து ஜூன் மாதம் 3-ந்தேதி வரை நடந்தது. பிரம்மோற்சவ விழா மற்றும் நித்ய கைங்கர்யங்களின்போது அதிகாரிகள், அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளால் ஏற்பட்ட தோஷ நிவர்த்திக்காக புஷ்ப யாகம் நடத்துவது வழக்கம்.
அதன்படி நேற்று கோவிந்தராஜசாமி கோவிலில் புஷ்ப யாகம் நடந்தது. அதையொட்டி காலை 9.30 மணிக்கு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமிக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து கோவில் தலைமை அர்ச்சகர் ஏ.பி.சீனிவாச தீட்சிதர் தலைமையில் மதியம் 1 மணியில் இருந்து மாலை 4 மணி வரை அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க மல்லிகை, கனகாம்பரம், சாமந்தி, கன்னேறு, மொகலி, சம்பங்கி, ரோஜா, அல்லி, துளசி, மருவம், தவனம், வில்வம், பன்னீர் இலை என 12 வகையிலான 3 டன் பாரம்பரிய மலர்களால் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமிக்கு புஷ்பார்ச்சனை எனப்படும் புஷ்ப யாகம் நடத்தினர்.
புஷ்ப யாகத்துக்கு தேவையான மலர்களை ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த காணிக்கையாளர்கள் வாகனங்களில் காணிக்கையாக கோவிலுக்கு அனுப்பி வைத்தனர். புஷ்ப யாகம் முடிந்ததும் மாலை 6.30 மணிக்கு கோவிலின் நான்கு மாட வீதிகளில் ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
- புஷ்ப யாகத்தில் பல்வேறு வகையான பூக்கள் மற்றும் மூன்று வகையான இலைகள் பயன்படுத்தப்பட்டன.
- வேத நாராயணசாமிக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
திருப்பதி மாவட்டம் நாகலாபுரம் வேதநாராயணசாமி கோவிலில் ஆண்டு தோறும் புஷ்ப யாகம் நடப்பது வழக்கம். அதன்படி நேற்று மதியம் 3 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரை கோவிலில் புஷ்ப யாகம் நடந்தது. புஷ்ப யாகத்தில் பல்வேறு வகையான பூக்கள் மற்றும் மூன்று வகையான இலைகள் பயன்படுத்தப்பட்டன.
முன்னதாக உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, வேத நாராயணசாமிக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. அதில் கோவில் அதிகாரி நாகரத்னா, உதவி அதிகாரி மோகன், கண்காணிப்பாளர் ஏகாம்பரம், கோவில் ஆய்வாளர் சீனிவாசலு மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- 7-ந்தேதி அங்குரார்ப்பணம் நடக்கிறது.
- 8-ந்தேதி ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது.
திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி மாவட்டம் நாகலாபுரம் வேத நாராயணசாமி கோவிலில் சமீபத்தில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்தது. அதில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளால் ஏற்பட்ட தோஷங்களை நிவர்த்தி செய்வதற்காக அடுத்த மாதம் (ஜூன்) 8-ந்தேதி புஷ்ப யாகம் நடக்கிறது.
அதையொட்டி 7-ந்தேதி அங்குரார்ப்பணம், 8-ந்தேதி காலை உற்சவர்களுக்கும், மூலவர்களுக்கும் ஸ்நாபன திருமஞ்சனம், மாலை புஷ்ப யாகம், அதன் பிறகு மாலை வீதி உற்சவம் நடக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்களை முழங்க 14 வகையான மலர்களால் உற்சவர்களுக்கு புஷ்பார்ச்சனை எனப்படும் புஷ்ப யாகம் நடத்தப்பட்டது.
அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவஹர்ரெட்டி மற்றும் பலர் பங்கேற்றனர்.
திருமலை, திருப்பதி தேவஸ்தான ஆஸ்தான வித்வான் ஸ்ரீவேதாந்த ஜெகநாத்ச் ஸ்ரவண நட்சத்திரத்தில் புஷ்ப யாகம் நடத்தப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான புஷ்ப யாகத்திற்காக இன்று அங்குரார்ப்பணம் ஆகம முறைப்படி அர்ச்சகர்கள் செய்தனர். ஏழுமலையான் கல்யாண மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு ஜீயர்கள் முன்னிலையில் பால், பன்னீர், இளநீர், சந்தனம் மூலம் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்படும்.
நாளை (வியாழக்கிழமை)மதியம் 1 மணி முதல் 5 மணி வரை சாமந்தி, சம்பங்கி, ரோஜா, மல்லி, துளசி, மருதம் உள்ளிட்ட 18 ரகமான மலர்களால் புஷ்பயாகம் நடத்தப்படும்.
வேதமந்திரங்கள் முழங்க 9 டன் மலர்களால் சாமிக்கு புஷ்ப யாகம் நடைபெறும். ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் சகஸ்கர தீப அலங்கார சேவைக்கு பிறகு 4 மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
திருப்பதியில் நேற்று 32816 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 14,459 முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.26 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்